ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் நினைவுதினம் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை படைகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று(30) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.














