இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகம் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை காங்கிரஸ் தலைவர்கள் முதல்வரை வாசலில் நின்று வரவேற்றனர்.
முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்றார் செல்வப்பெருந்தகை.
அங்கு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் விஜய்.
முதல்வர் வருகையின்போது தவெக தொண்டர்கள் இருபுறமும் நின்று கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, இதை அடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து ஐயூஎம்எல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் சந்திப்புக்குப் பின் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அதில் முதல்வரின் அன்புப் பரிமாற்றம் தொடரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.















