• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“தமிழ் மக்களின் தனி அடையாளத்தை அழிக்கச் சதி”: புத்தசாசன அமைச்சின் தலையீட்டிற்கு கஜேந்திரகுமார் கடும் சாடல்!

“தமிழ் மக்களின் தனி அடையாளத்தை அழிக்கச் சதி”: புத்தசாசன அமைச்சின் தலையீட்டிற்கு கஜேந்திரகுமார் கடும் சாடல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/15
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு என கலாச்சார ரீதியாக எந்த ஒரு தனி அடையாளமும் இருக்கக்கூடாது என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எண்ணமே யாழ் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்துக்குள் புத்தசாசன அமைச்சு உள்வாங்கப்பட்டமைக்கு பிரதான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

யாழ் தென்மராட்சி பகுதியில் நேற்றைய தினம் (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்படும் போது அதனை அமைத்து யாழ் மாநகர சபைக்கு வழங்கப்படும் என்ற உறுதி மொழியின் பிரகாரம் அமைக்கப்பட்டமை யாவரும் அறிந்தது.

பின்னர் யாழ் மாநகர சபை அதன் பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்த நிலையில் இந்திய தூதரகம் தலையீடு செய்து சில காலங்களுக்கு அதனை பராமரித்து தருவதாக வழங்கிய உறுதி மொழியின் அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான ஒரு நிலையில் கடந்த அரசாங்கம் ஒன்றில் குறித்த கலாச்சார மண்டபத்தின் பராமரிப்பு செலவுகளை பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்கும் அதனை தமது கண்காணிப்பின் கீழ் வழங்குமாறு கோரியது.

அதற்கு தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் இந்திய தூதரகத்திற்கு விடுத்த அழுத்தத்தின் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இவ்வாறான ஒரு நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு என அடையாளமாக கட்டப்பட்ட திருவள்ளூர் கலாச்சார மண்டபத்தினை புத்த சாசன அமைச்சையும் நம்பிக்கை பொறுப்பு சபைக்குள் உள்வாங்கியமை குறித்து பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் கலாச்சார ரீதியான மற்றும் மத அடையாளங்களை அழிப்பதற்கும் திரிவு படுத்துவதற்கும் பிரதான காரணமாக விளங்குகின்ற புத்தசாசன அமைச்சை திருவள்ளுவர் கலாச்சார மண்டப நம்பிக்கை பொறுப்புச் சபைக்குள் உள்வாங்கியமை திட்டமிட்ட தமிழின அழிப்பாகும்.

புத்த சாசன அமைச்சின் கீழ் வருகின்ற தொல்பொருள் திணைக்களம் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட முறையில் பௌத்த மத ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வரும் நிறுவனமாகும்.

உதாரணமாக கூறின் இராணுவத்தின் துணையுடன் தையிட்டியில் தனியார் காணிக்குள் திட்டமிட்டு பௌத்த மத கட்டுமானத்தை அமைத்தது மட்டுமல்லாமல் இன்று வரை அதனை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளை புத்தசாசன அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கோ பௌத்த சமயத்துக்கோ எதிரானவர்கள் அல்ல ஆனால் திட்டமிட்ட சிங்கள மற்றும் பௌத்தமயமாக்கல்களை மட்டும் எதிர்ப்பவர்கள்.

சிங்கள மக்கள் வடக்கில் வசிக்க தகுதியற்றவர்கள் என நாங்கள் கூற வரவில்லை தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து குடியாறுவதையே நாங்கள் எதிர்க்கிறோம்.

எமது நியாயமான கோரிக்கைகளை விளங்கிக் கொள்ளாத சிங்கள பௌத்த பேரினவாதம் எங்களையும் தமிழ் இனவாதிகளாக சித்தரிக்கிறார்கள் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.

இன்று நேற்று அல்ல இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை தட்டிக் கேட்பவர்களை இனவாதிகள் என முத்திரை குத்துவதே வரலாறு

தமிழ் மக்கள் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் தெற்கில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றாலும் அவர்களின் ஆட்சியில் பௌத்த சிங்கள கொள்கைகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

ஜேவிபியாக தமிழின அழிப்பில் பங்கெடுத்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கடந்த கால அரசாங்கங்களை விட மோசமான முறையில் தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகிறது.

ஆகவே யாழ்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்துக்குள் புத்த சாசன அமைச்சு உள்ளீர்க்கப்பட்டமை தமிழ் மக்களுக்கென தனியான கலாச்சார அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற சிந்தனையே காரணம் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென மேலும் தெரிவித்தார்

Related

Tags: Jaffnakajendhirakumar ponnampalamsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் பல பகுதிகளுக்கும் வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை!

Next Post

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதம் சீனா பயணம்!

Related Posts

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

2026-08-09
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இலங்கை

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

2026-08-09
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

சிறைச்சாலை மோதல்கள் குறித்து ஆராயத் தொடர்புடைய தலைவர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

2026-08-09
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
இலங்கை

நாட்டில் 90,000-ஐ நெருங்கும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை: ஆகஸ்ட் முதல் 8 நாட்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

2026-08-09
எட்டாவது வாரமாகவும் பலாலியில் போராட்டம்!
இலங்கை

எட்டாவது வாரமாகவும் பலாலியில் போராட்டம்!

2026-08-09
கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

வெலிகம மணல்கம கடலில் சர்ஃபிங் விளையாடிய துனிசிய சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

2026-08-09
Next Post
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதம் சீனா பயணம்!

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதம் சீனா பயணம்!

நுவரெலியாவில் பயங்கரம்: ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள் – அதிகாரிகளின் மிரட்டலால் அவலம்!

நுவரெலியாவில் பயங்கரம்: ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள் – அதிகாரிகளின் மிரட்டலால் அவலம்!

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

ஆராச்சிக்கட்டுவ முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

0
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

0
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

0
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

2026-08-09
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

2026-08-09
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

2026-08-09
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

2026-08-09

Recent News

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

2026-08-09
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

2026-08-09
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

2026-08-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.