தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி 2025ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் நிலைமைகளினால் உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி பாடசாலைகள் , மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற நிறுவனப் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்றுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மீள பெறக்கோரி நாய் பிரியர்கள் இந்திய உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் இன்று ( 19) இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.














