மலையக மக்களின் நில உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், அதுகுறித்து அரசு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கு கடிதங்களை கையளிக்கும் வகையில் 6 நாட்கள், 140 கிலோமீற்றர் தூரம் கொண்ட மிகப்பெரிய நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை நகரில் இருந்து ஆரம்பமான இந்த நடைபயணம் கொட்டகலை நகரை அடைந்தபோது, அங்குள்ள வர்த்தக சமூகத்தினரால் நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த சிறுவன் உட்பட குழுவினருக்கு மிகுந்த உளமார்ந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடைபயணத்தில் லிந்துலை சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும், லிந்துலை இல்டன்ஹோல் தோட்டம் (இலக்கம் 06 லயம்) பகுதியில் வசிக்கும் பிரேமராஜா கார்கி என்ற 07 வயது சிறுவனே பங்கேற்றுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதி செயலகத்தை குறித்த சிறுவன் சென்றடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது .














