இந்தியா முழுவதும் சமையல் எரிவாயுவின் விலை இன்று (ஜூன் 01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் மிகப்பெரிய அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான இந்தியன் ஒயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திங்களன்று 19 கிலோ வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 42 உயர்த்தியது.
இதனால் டெல்லியில் அதன் விற்பனை விலை 3,113.5 ரூபாவாக உயர்ந்தது.
கொல்கத்தாவில் இந்த விலை உயர்வு 53.50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதனால், அங்கு 19 கிலோ வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 3,255.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசிய மோதல் தொடர்பான அண்மைய இடையூறுகளைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகப் பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் இருப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்த விலை உயர்வானது ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

















