இலங்கை மற்றும் மேந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று (03) ஆரம்பமாகிறது.
அதன்படி, தொடரின் முதல் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 08.00 மணிக்கு ஜமைக்காவின்,
கிங்ஸ்டனில் அமைந்துள்ள சபீனா பார்க் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு ஷெய் ஹோப் தலைமைதாங்குகிறார், அதேசமயம் இலங்கை அணிக்கு விக்கெட் காப்பாளர் குசல் மெண்டீஸ் தலைமை தாங்குகிறார்.
இந்தத் தொடருக்காக முன்னாள் தலைவர் சரித் அசலங்க, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இடம்பெற்ற வலுவான அணியை இலங்கைத் தேர்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
2026 ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஈஷான் மலிங்காவும், சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்ஷனவும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், மேற்கிந்திய தீவுகள் அணியானது, இடது கை துடுப்பாட்ட வீரர் ஷிம்ரன் ஹெட்மயருடன், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு மற்றும் ஜெய்டன் சீல்ஸ் போன்ற வீரர்களையும் சேர்த்துள்ளது.
















