2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு சென்றுள்ளார்.
பெய்ஜிங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்ததைத் தொடர்ந்து ஜியின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
ஜியும் கிம்மும் சந்திக்கும்போது, அணு ஆயுத ஒழிப்பு, அமெரிக்க உறவுகள் மற்றும் இரு கொரிய நாடுகளுக்கு இடையேயான மோதல் ஆகியவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடும்.
சீனாவின் உயர்மட்டத் தூதர் வாங் யி கடந்த ஏப்ரல் மாதம் பியோங்யாங்கிற்குப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, பெய்ஜிங்குடன் தகவல் தொடர்பை மேம்படுத்த கிம் விருப்பம் தெரிவித்தார்.
மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததும், அதே சமயம் மிகவும் கணிக்க முடியாததுமான, ரஷ்யாவுடன் நெருங்கிப் பழகிவரும் ஒரு கூட்டாளியின் மீது பெய்ஜிங் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட முயற்சிக்கும் வேளையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
ஜியின் பயணத்திற்கு முன்பு, சீனாவின் உயர்மட்டத் தூதர் வாங் யி, ஏப்ரல் 9-10 திகதிகளில் பியோங்யாங்கிற்குப் பயணம் செய்தார்.
2019-க்குப் பின்னர் வட கொரியாவிற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
அண்மைய மாதங்களில் பெய்ஜிங், பியோங்யாங்குடனான உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு, கொவிட் காரணமாக ஏற்பட்ட பல ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர், சீனாவின் தேசிய விமான நிறுவனம் வட கொரியத் தலைநகருக்கு நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியது.
அதே நேரத்தில், சீனாவின் ரயில் சேவை நிறுவனம் இரு நாடுகளுக்கும் இடையே பயணிகள் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்கியது.
கடந்த செப்டம்பரில் பெய்ஜிங்கில் நடந்த ஒரு இராணுவ அணிவகுப்பின் போது ஷியும் கிம்மும் சந்தித்த பின்னர், வட கொரிய வெளியுறவு அமைச்சர் சோ பெப்ரவரியில் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டார்.
பின்னர் ஏப்ரலில், வாங் பியோங்யாங்கிற்குப் பயணம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.














