• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை” -சலேவை சாடிய சிறிநேசன்!

“மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை” -சலேவை சாடிய சிறிநேசன்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

குற்றம் செய்யாதவர்கள் எதற்கும் அஞ்சாமல் விசாரணைகளுக்கு முகம்கொடுத்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

“மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. குற்றம் செய்யாதவர்கள் வெளிப்படையாக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வெளியில் வரலாம்.

தம்மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என்றும், ஜனாதிபதி மீதான விமர்சனங்கள் என்றும் கூறுவது அறிவுப்பூர்வமானதாகத் தெரியவில்லை.

இது ஆதரவாளர்களை உணர்ச்சிவசப்படுத்துவதற்காகவும், சிறைக்குச் சென்றாலும் தனது சீற்றம் குறையவில்லை என்பதைக் காட்டுவதற்காகவுமே செய்யப்படுகிறது.

தற்போது விசாரணைகளை மேற்கொள்ளும் ஷானி அபேசேகர, கடந்த காலத்திலும் நேர்மையாகச் செயல்பட்ட ஓர் அதிகாரி ஆவார்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் மூலம் பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்ட சிறிநேசன், சுமார் 43 ஊடகவியலாளர்கள் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பேராசிரியர் ரவீந்திரநாத், கல்வியலாளர் தம்பையா மற்றும் அருட்தந்தையர்கள் எனப் பலர் கொல்லப்பட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு விசாரணை கடந்த காலத்திலும் நடைபெற்றது.

பிள்ளையான் அவர்களுடன் இருந்த சகாக்களே தற்போது அவருக்கு எதிராக அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பரவலாகப் பேசப்படுகின்றன.

இதேவேளை, சுரேஷ் சலே என்பவர் தனது கணினி மற்றும் கைபேசியின் கடவுச்சொற்களை வழங்காமல், வாக்குமூலம் அளிக்க மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் நிரபராதி எனில், சட்டத்திற்குப் பயப்படாமல் விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் மூலமே எது உண்மை, எது பொய் என்பது வெளிவரும்.

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சி குறித்துப் பேசிய அவர், ஐந்து ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்தில் 30 வருடங்களாக மூடிமறைக்கப்பட்ட உண்மைகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

சோமரத்ன ராஜபக்ச என்பவர் கூறியதன் அடிப்படையில் தற்போது செம்மணியில் 400-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உண்மைகள் வெளிவருவது வரவேற்கத்தக்கது என்றாலும், எலும்புக்கூடுகளின் மரபணு சோதனை மூலம் கொல்லப்பட்டவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும், கொலை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நீதியும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.

இத்தகைய கொடூரங்கள் மீள நிகழாமல் இருக்க முறையான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில், ‘பப்பா’ மற்றும் ‘சொனிக்’ என அழைக்கப்படும் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ‘அல்பா’ எனப்படும் முக்கிய குற்றவாளிக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சிறிநேசன், அவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடும்போது தற்போதைய அரசு விசாரணைகளில் ஓரளவு முன்னேற்றத்தைக் காட்டினாலும், பௌத்த சிங்கள மேலாதிக்கக் குருமார்களின் அழுத்தங்கள் காரணமாக உண்மைகள் முழுமையாக வெளிவருமா என்ற சந்தேகம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே தமிழ் மக்கள் தொடர்ந்து சர்வதேச விசாரணையைக் கோரி வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சுட்டிக்காட்டினார்.

 

 

Related

Tags: sirinesansrilanka newssuresh salle
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

Next Post

நீண்ட காலமாக சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

Related Posts

சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

2026-07-05
கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !
இலங்கை

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !

2026-07-05
சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு
இலங்கை

சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

2026-07-05
கேப்பாப்பிலவு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து காணிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!
இலங்கை

கேப்பாப்பிலவு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து காணிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

2026-07-05
காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் போராட்டத்தில்!
இலங்கை

காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் போராட்டத்தில்!

2026-07-05
போக்குவரத்துப் பொறுப்பாளரின்  துப்பாக்கி பலத்தின் அருகே கண்டுபிடிப்பு!
இலங்கை

போக்குவரத்துப் பொறுப்பாளரின் துப்பாக்கி பலத்தின் அருகே கண்டுபிடிப்பு!

2026-07-05
Next Post
நீண்ட காலமாக சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

நீண்ட காலமாக சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

கதிர்காமத்துக்குப் போகும்  சுப்பிரமணியமும்  நரகத்துக்குப் போகும் வெறுப்பர்களும்! நிலாந்தன்.

கதிர்காமத்துக்குப் போகும்  சுப்பிரமணியமும்  நரகத்துக்குப் போகும் வெறுப்பர்களும்! நிலாந்தன்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே மோதல்: 20 பேர் காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே மோதல்: 20 பேர் காயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

0
சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

0
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு  கிரகம் கண்டுபிடிப்பு!

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு கிரகம் கண்டுபிடிப்பு!

0
மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைத் துன்புறுத்தும் விளம்பரங்கள் – 7 நாட்களில் பதில் கோரி மத்திய அரசு உத்தரவு!

0
கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !

0
17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

2026-07-05
சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

2026-07-05
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு  கிரகம் கண்டுபிடிப்பு!

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு கிரகம் கண்டுபிடிப்பு!

2026-07-05
மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைத் துன்புறுத்தும் விளம்பரங்கள் – 7 நாட்களில் பதில் கோரி மத்திய அரசு உத்தரவு!

2026-07-05
கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !

2026-07-05

Recent News

17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

2026-07-05
சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

2026-07-05
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு  கிரகம் கண்டுபிடிப்பு!

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு கிரகம் கண்டுபிடிப்பு!

2026-07-05
மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைத் துன்புறுத்தும் விளம்பரங்கள் – 7 நாட்களில் பதில் கோரி மத்திய அரசு உத்தரவு!

2026-07-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.