Update : July 6, 2026 12.56pm
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மேலும் 100க்கும் மேற்பட்டோர் இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.













