ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று (23) ஆரம்பமாகின்றன.
23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று முதல் ஆகஸ்ட் 02 வரை நடைபெறும்.
2014-க்குப் பின்னர் , ஸ்காட்லாந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.
இந்த ஆண்டு, இப்போட்டியில் 74 நாடுகள் பங்கேற்கின்றன, இதில் கிட்டத்தட்ட 3,000 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
விளையாட்டுப் போட்டிகளின் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு விளையாட்டு நிகழ்வுகளின் எண்ணிக்கை 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளாஸ்கோவிலிருந்து 8 மைல் சுற்றளவிற்குள் உள்ள நான்கு முக்கிய விளையாட்டு வளாகங்களில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை சார்பில் 40 விளையாட்டு வீரர்கள் ஏழு விளையாட்டுகளில் போட்டியிடுவார்கள்.
















