இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா முதலாம் நாள் பகல் போசன இடைவேளையின் போது 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.
கே.எல். ராகுல் 18 ஓட்டங்களுடனும் யஷஸ்வி ஜய்ஸ்வால் 45 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
இரண்டு தடவைகள் பிடிகள் கொடுத்து தப்பித்த தேவ்டத் படிக்கல் 13 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ஷூப்மன் கில் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
தேவ்டத் படிக்கல் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் கொடுத்த சற்று கடினமான பிடியை சொனால் தினூஷ பிடிக்கத் தவறினார்.
தொடர்ந்து தேவ்டத் படிக்கல் ஒரு ஓட்டம் மாத்திரம் பெற்றிருந்தபோது கொடுத்த மற்றொரு பிடியை ஸ்லிப் நிலையில் தனஞ்சய டி சில்வா தவறவிட்டார்.
பந்துவீச்சில் லஹிரு குமார 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.



















