இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷவை, இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இது குறித்துத் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கௌதம் கம்பீர், “டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு நற்பண்பு, பொறுமை மற்றும் மன வலிமை ஆகியவை மிகவும் அவசியமானவை.
இந்திய அணி வீரர்கள் இவற்றை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினர். அதேவேளை, இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ மிகவும் அற்புதமாக விளையாடினார்” எனப் பதிவிட்டுள்ளார்.
இத்தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற போதிலும், தொடரை முழுமையாகக் கைப்பற்றும் இந்திய அணியின் வாய்ப்பைச் சொனல் தினுஷவின் அபார ஆட்டம் தடுத்து நிறுத்தியது.
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 100 மற்றும் 84 ஓட்டங்களைக் குவித்த இவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 103 மற்றும் 133 ஓட்டங்களைப் பெற்று அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















