பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 472பேர் பாதிக்கப்பட்டதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 43இலட்சத்து 75ஆயிரத்து 814பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 123பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 56ஆயிரத்து 275பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 377பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 39இலட்சத்து 92ஆயிரத்து 416பேர் பூரண குணமடைந்துள்ளனர்.



















