பிலியந்தலை, போகுந்தர பகுதியில் பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் இன்று (19) முற்பகல் தாக்கிவிட்டு, சந்தேகநபர் தப்பிச் செல்ல பயன்படுத்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பிலியந்தலை – மஹரகம வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள தோட்டமொன்றில் இருந்து இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
பிலியந்தலை, பொக்குந்தர பகுதியில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற வன்முறைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், தடுத்து நிறுத்த முயன்ற பொலிஸ் அதிகாரி மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தற்காப்புக்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியும், இடுப்பில் குண்டு பாய்ந்த சந்தேகநபரும் தற்போது களுபோவிலபோதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொரலஸ்கமுவ ஓ.பி.பெரேரா மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கூரிய ஆயுதங்களுடன் வந்த நால்வர், வீட்டில் இருந்தவர்களைத் தாக்கியதுடன் வீட்டுக்கும் பாரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும்போதே இந்த சம்பவம் இடம்பெறுள்ளது.












