வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
அதிகாலை சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று, வசந்த மண்டப பூசைகள் நடைபெற்று, பிள்ளையார், சிவன் உமாதேவியார் சமேதராய் முருகப் பொருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி கொடியேற்றம் நடைபெற்றது
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள மகோற்சவ திருவிழாக்கள், தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்று , எதிர்வரும் 11ஆம் திகதி தேர்த் திருவிழாவும், மறுநாள் ஆடி அமாவாசை தினமான 12ஆம் திகதி கீரிமலை புனித கடற்கரையில் தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.














