தாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் மொத்தமாக 15இலட்சத்து எட்டாயிரத்து 167பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் தாய்லாந்தில் இதுவரை 16இலட்சத்து 37ஆயிரத்து 432பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17ஆயிரத்து 14பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 10ஆயிரத்து 828பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 77பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 251பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 324பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


















