இங்கிலாந்தின் 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் சில பகுதிகளுக்கு மஞ்சள் நிற மழை எச்சரிக்கையை (Yellow rain warning) விடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக வானிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள ஒரு ‘தடை’ (Blocked position) காரணமாகவே இந்தத் தொடர் மழை நீடிக்கிறது.
இதில் சிறிய மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் தெரிந்தாலும், மீண்டும் மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்று காலை நிலவரப்படி, இங்கிலாந்தில் 98 இடங்களில் வெள்ள எச்சரிக்கையும், 170 இடங்களில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே நிலம் அதிக ஈரப்பதத்துடன் இருப்பதாலும், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாலும் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஸ்காட்லாந்தில் 2 வெள்ள எச்சரிக்கைகளும், வேல்ஸில் 5 வெள்ள அபாய முன்னெச்சரிக்கைகளும் நடைமுறையில் உள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து முழுவதும் மேகமூட்டமான வானிலையும் மழையும் நீடிக்கிறது.
பொதுவாக, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் இங்கிலாந்தைக் கடந்து கிழக்கு நோக்கி நகரும். ஆனால் தற்போது ஸ்காண்டிநேவியா (Scandinavia) பகுதியில் ஒரு பெரிய உயர் அழுத்த மண்டலம் (High pressure) நிலை கொண்டுள்ளமையினால் இதனை பிளாக்ட் ‘ (Blocked) வானிலை என அழைக்கின்றனர்.
இது ஒரு ‘சாலைத் தடை’ (Road-block) போல செயல்பட்டு, மழை மேகங்களை கிழக்கு நோக்கி நகர விடாமல் தடுக்கிறது.
இதனால் இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பா முழுவதும் ஒரே இடத்தில் மழை மேகங்கள் தேங்கி நின்று தொடர்ந்து மழையைக் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.














