நாடாளுமன்ற உறுப்பினராகும் முன் (Josh Simons ) ஜோஷ் சைமன்ஸ் தலைவராக இருந்த (Labour Together) ‘லேபர் டுகெதர்’ என்ற சிந்தனைக்குழாம் (Think Tank), பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட பின்னணி குறித்து அறிக்கை ஒன்றை தயாரித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் கேப்ரியல் போக்ரண்ட் (Gabriel Pogrund) என்பவரின் யூத மத நம்பிக்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அந்த அறிக்கை ஆராய்ந்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ‘APCO Worldwide’ நிறுவனம் தயாரித்த இந்த அறிக்கையில், பத்திரிகையாளர் போக்ரண்ட் அரச குடும்பம் குறித்து எழுதிய செய்திகள் பிரித்தானியாவை சீர்குலைப்பதாகவும், அவை ரஷ்யாவின் நலன்களுக்குச் சாதகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக சுமார் 30,000 பவுண்டுகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமரின் ஒழுக்கநெறி ஆலோசகர் விசாரணை நடத்தினார்.
சைமன்ஸ் அமைச்சரவை விதிகளை மீறவில்லை என்று ஆலோசகர் கண்டறிந்த போதிலும், பொதுவெளியில் அவர் அளித்த விளக்கங்களுக்கும் அறிக்கையின் உண்மையான நோக்கத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அரசாங்கத்தின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரசாங்கத்தின் முக்கியமான பணிகளுக்குத் திசைதிருப்பலாக இருக்க விரும்பவில்லை” எனக் கூறி சைமன்ஸ் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்தார்.
பிரதமர் கீர் ஸ்டார்மர், சைமன்ஸின் கடிதத்தை ‘வருத்தத்துடன்’ ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், “மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் வேளையில், அமைச்சரின் ராஜினாமாவை சத்தமில்லாமல் மறைக்க பிரதமர் முயல்கிறார் என எதிர்க்கட்சித் தலைவரான கெமி படேனோக் (Kemi Badenoch) இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













