புதையலைத் தேடுவதற்காகக் குழி தோண்டிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் – திருகோணமலை பிரதான வீதியில் உள்ள அரச மரச் சந்தியில், உள்ளூர் மக்களால் போற்றப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறித்த இடத்தில் காணப்படும் வடிகானுக்கு அருகே புதையலைத் தேடுவதற்காக சந்தேக நபர் ஒருவர் குழி தோண்டியதாக கந்தளாய் பொலிசார் தெரிவித்தனர்.
உள்ளூர் மக்களால் போற்றப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சந்தேக நபர் குழி தோண்டியதாக பொலிசார் தெரிவித்தனர்.
சுமார் ஐந்து மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டப்பட்ட நிலையில், சந்தேக நபர் நேற்று கந்தலே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
மேலும், அந்த இடத்தின் உரிமையாளரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அது தொடர்பில் பெண் ஒருவர் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கந்தளாய் பொலிசார் தெரிவித்தனர்.















