சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று (12) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ஊடகங்களின் தகவலின்படி,
குறித்த மீனவர்கள் மன்னார் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அலெக்ஸ், அந்தோனி, சந்தான அலெக்சியா, பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகய செல்வசனு என அடையாளம் காணப்பட்டனர்.
மீனவர்கள் பயன்படுத்திய நாட்டுப் படகும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறு மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தி, நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.













