அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெலிகொம் அருகில் நேற்றுமாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 வயதுடைய சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 10 கிராம் 130 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் பணப்பையில் இருந்து ஒரு தொகை பணம், கைத்தொலைபேசி என்பவற்யையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிய போது போதைப்பொருள் தொடர்பிலான குற்றச்சாட்டில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதுடன் இலங்கை பொலிஸில் இருந்து விலகும் போது பொலிஸ் சார்ஜன்ட் ஆக செயற்பட்டிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.













