தமிழக முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர் சி.ஜோசப் விஜய், முதன்முறையாக நாளை (25) புது டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த தகவல்களின்படி, முதலமைச்சரின் தேசிய தலைநகர் பயணத்திற்கான ஏற்பாடுகளை உள்துறை செயலாளர் உள்ளிட்ட மூத்த மாநில அதிகாரிகள் மேற்பார்வையிட விஜய் நாளை காலை சென்னையில் இருந்து புறப்படவுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் விஜய் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணத்தின்போது, தமிழக முதல்வர் மூத்த காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க வாய்ப்புள்ளது.
டெல்லி பயணத்தின் போது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நிறுவப்பட்ட திருவள்ளுவரின் உருவச் சிலையை விஜய் திறந்து வைக்க உள்ளார்.
விஜய்யின் கட்சியான தமிழக வெற்றி கழகம் (TVK) மாபெரும் தேர்தல் வெற்றியைப் பெற்று, அவர் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சில வாரங்களுக்குப் பின்னர் இந்தப் பயணம் அமைந்துள்ளது.















