ஆறு வாரங்களுக்கு முன்னர் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், லெபனானுக்குள் தனது படைகளை மேலும் முன்னேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை வர்த்தகத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் 2% க்கும் மேல் அதிகரித்துள்ளன.
இதன்படி, அமெரிக்க மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 2.37 டொலர்கள் அதிகரித்து 89.73 டொலர்களாகவும், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 2.16 டொலர்கள் அதிகரித்து 93.28 டொலர்களாகவும் உயர்ந்துள்ளன.
அமெரிக்காவில் இஸ்ரேல் – லெபனான் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த சில நாட்களிலேயே இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.
இதனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே விரைவில் எட்டப்படவிருந்த போர்நிறுத்த ஒப்பந்த நீடிப்புக்கான சாத்தியக்கூறுகள் மங்கியுள்ளன.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் ஐந்தில் ஒரு பகுதியைத் தீர்மானிக்கும் முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கடற்போரைக் கண்ணிவெடிகளை இட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் இப்பாதையை மீண்டும் திறப்பது தாமதமாகலாம் என சந்தை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும், தற்போதைய மத்திய கிழக்கு விநியோகத் தட்டுப்பாடு குறித்த அச்சம் காரணமாக எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பில் காணப்படுகிறது.















