பிரித்தானியாவில் ஒற்றைப் பயன்பாட்டு ‘வேப்’ மின்னணு புகைக்குச்சிகளுக்கு அரசாங்கம் தடை விதித்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், சிறுவர்கள் மத்தியில் அதன் பயன்பாடு அதிரடியாகக் குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், சிறுவர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்கவும் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி இந்தத் தடை அமல்படுத்தப்பட்டது.
பிரபல ‘YouGov’ நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பின்படி, சிறுவர்கள் மத்தியில் , பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேப் பயன்பாடு குறைந்திருந்தாலும், பயன்படுத்தப்பட்ட சாதனங்களை முறையாக அகற்றுவதில் இன்னும் பெரும் சவால்கள் நீடிப்பதாக ‘மெட்டீரியல் ஃபோகஸ்’ (Material Focus) என்ற சுற்றுச்சூழல் பிரச்சார அமைப்பு எச்சரித்துள்ளது.
சிறுவர்கள் மத்தியில் வேப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் சட்டம் வெற்றி பெற்றுள்ள போதிலும், விற்கப்படும் வேப் குப்பைகளைச் சரியாகக் கையாள்வதற்கான உள்கட்டமைப்புகளை அரசாங்கம் மேலும் பலப்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













