தம்புளையில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு முத்தரப்பு ஒருநாள் தொடரின் விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், இந்தியா ‘ஏ’ அணி இலங்கை ‘ஏ’ அணியை எட்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்யத் தீர்மானித்த இந்தியா ‘ஏ’ அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது.
ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் ஒரு சிறப்பான சதம் (101) அடித்து, இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் எடுக்க உதவினார்.
பதிலுக்கு ஆடிய இலங்கை ‘ஏ’ அணி, கிட்டத்தட்ட இன்னிங்ஸ் முழுவதும் இலக்கைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் தோன்றினாலும், இறுதியில் தடுமாறியது.
கடையிக 48.5 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
இலங்கை ‘ஏ’ அணியின் தலைவர் சஹான் அரச்சிங்கேயின் 74 ஓட்டங்கள் வீணானது.
இந்தியா ‘ஏ’ அணியில், சுழற்பந்து வீச்சாளர்களான ஆயுஷ் படோனி, அனுகுல் ராய் மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கானும் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.


















