இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், ஜெர்மனியுடன் இணைந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 6 புதிய AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
ஜெர்மனியின் ‘தைசென்க் ரூப்’ (Thyssenkrupp) மற்றும் இந்தியாவின் ‘மசாகான் டாக்’ ((Mazagon Dock) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த நீர்மூழ்கிகளில், இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்படவுள்ளன.
2032-ம் ஆண்டில் முதல் நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
2035-ம் ஆண்டிற்குள் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200-க்கும் அதிகமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.














