நீர்கொழும்பு, சிறைச்சாலை சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2026 ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த மொத்தம் 17 சிறைச்சாலை அதிகாரிகளும் 88 கைதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 9 சிறைச்சாலை அதிகாரிகளும் 76 கைதிகளும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளிலும், 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 12 கைதிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து உடனடி மற்றும் விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறும், அது தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிணங்க, இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் (CID) கொழும்பு குற்றப் பிரிவிடமும் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளது.












