சிறுவர்களைப் பாதிக்கும் வகையிலான ஆபத்தான உள்ளடக்கங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதில் டிக்டாக் (TikTok) செயலி தவறியுள்ளதா என்பது குறித்துப் பிரிட்டனின் ஊடக ஒழுங்குமுறை அமைப்பான ‘ஓஃப்காம்’ (Ofcom) உத்தியோகபூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த 2023 அக்டோபரில் சட்டமாக்கப்பட்டு, தற்போது கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரிட்டனின் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை டிக்டாக் நிறுவனம் முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை இந்த விசாரணை ஆராயவுள்ளது.
டிக்டாக் செயலியால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் போதுமான சான்றுகள் இருந்தபோதிலும், அவர்களைப் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க டிக்டாக் தவறிவிட்டது என ஓஃப்காம் அமைப்பின் அண்மைய ஆய்வறிக்கை ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அத்துடன், சிறுவர்கள் இந்தச் செயலியில் ஆபத்தான உள்ளடக்கங்களை எளிதாகப் பார்க்கும் சூழல் நிலவுவதாகவும் மற்றொரு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே இந்த விசாரணை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















