• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது – இ.இளங்கதிர்

முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது – இ.இளங்கதிர்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/06/03
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, முக்கிய செய்திகள்
78 1
A A
0
44
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.இளங்கதிர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளாரான நாகராசா பிரதீபராசா பயங்கரவாதத்தை மீளுருவாக்கும் விதமான பதிவுகளை சமூக வளைதளத்தில் பதிவேற்றினார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமது கட்சி சார்பில் கண்டனம் வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயகப் போராளிகள் கட்சியானது ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் பயணிக்கும் ஒரு கட்சியாகும்.

அந்தவகையில் நாங்கள் எமது மக்களை ஒரு ஜனநாயக வழிக்குக் கொண்டு வந்து அதற்கூடாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தினைக் கொண்டு வருவதற்காகவே முயற்சித்துக் கொண்டு வருகின்றோம். இதுவே எங்கள் நோக்கமுமாகும்.

இவ்வாறு எமது நோக்கமும், செயற்பாடுகளும் இருக்கையில் தமிழீழ விதலைப்புலிகள் அமைப்பின் மௌனத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு ஜனநாயக வழியில் இயங்கும் போராளிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட எமது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிருவாகப் பொறுப்பாளர் தீபன் அவர்களை இலங்கையின் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது விடயத்தினை நாங்கள் வன்மையாககக் கண்டிக்கின்றோம். ஏனெனில் ஜனநாயக வழியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் மீது தேவையற்ற வகையில் கைதுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது. அவற்றை எமது தமிழ் மக்களும், போராளிகளும் நினைவு கூருவது வழமையானதொரு விடயம். அது பயங்கரவாதத்தை வளர்க்கும் செயற்பாடு அல்ல.

படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூருவது எவ்வாறு பயங்கரவாதத்தை வளர்க்கும் செயற்பாடாக அமையும்? அந்தவகையில் அந்த விடயம் தொடர்பில் எமது மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் முகநூலில் பதிவேற்றிய தரவு தொடர்பாகவும், தலைவர் பிரபாகரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு பதிவேற்றிய தரவு தொடர்பிலும் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூருவதும், தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்வதும் ஒரு பயங்கரவாதச் செயற்பாட்டை மீள உருவாக்கும் என்பது சாத்தியமில்லாததும், முட்டாள் தனமானதுமான ஒரு கருதுகோள்.

எனவே இவ்வாறு சாத்தியமில்லாத விடயங்களை முன்நிறுத்தி எமது முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த நாட்டின் அரசாங்கததிற்கு நாங்கள் தெளிவாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். தமிழ் மக்கள் மீதும், தமிழ் மக்களுக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்ற முன்னாள் போராளிகளின் அமைப்பான ஜனநாயகப் போராளிகள் கட்சி மீதும் தேவையற்ற கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு மிகப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களைத் தான் உருவாக்கும்.

இந்த விடயங்களை நாங்கள் பன்நாட்டு சமூகத்திற்கு எடுத்துக் கூறியுள்ளோம். அனைத்து நாடுகளின் தூதுவர்களுடனும் பேசியிருக்கின்றோம். சர்வதேச ரீதியாகவும் நாங்கள் இந்த விடயத்தைக் கொண்டு செல்வோம். அதனூடாக இலங்கைக்கு மிகப் பெரிய அழுத்தத்தையும் கொடுப்போம்.

இன்றைய நிலையில் அரசியல் ரீதியில் ஜனநாயக வழியில் செயற்படுகின்ற போராளிகள் மத்தியில் ஒரு பதட்டமான சூழ்நிலை காணப்படுகின்றது. அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது. இதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: பாதுகாப்புமுன்னாள் போராளிஜனநாயகப் போராளிகள் கட்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் : நடவடிக்கை தேவை என்கிறார் கமல்ஹாசன்!

Next Post

கொரோனாவின் ஆபத்தை அறிந்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என வலியுறுத்து!

Related Posts

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 
இலங்கை

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!
BREAKING

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு
இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து
இலங்கை

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!
மன்னாா்

மன்னாரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம்!

2025-12-01
வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு
இலங்கை

வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

2025-12-01
Next Post
தொற்றுநோயியல் பிரிவில் முடிவெடுப்பது மூன்று வைத்தியர்கள் மட்டுமே!

கொரோனாவின் ஆபத்தை அறிந்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என வலியுறுத்து!

ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியது!

ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியது!

ஓமனியாமடு ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்வு – 14 பேர் கைது!

ஓமனியாமடு ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்வு – 14 பேர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

0
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

0
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

0
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01

Recent News

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.