• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் -கோட்டாபய

கடல் மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற கோட்டாபய முயற்சிப்பதாக தகவல்!

Dhackshala by Dhackshala
2022/07/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
92 1
A A
0
44
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடல் மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக சர்வதேச செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமான நிலையத்தினூடாக நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறான மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளதுடன், அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது நேரடியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைடுத்து, ஜனாதிபதியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறும் நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளிப்பதாக ஜனாதிபதி அறிவித்தார்.

73 வயதான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கைப்பற்றுவதற்கு சற்று முன்னர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

கடற்படைக் கப்பலில் ஏறி திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பின்னர் நேற்று மாலை டுபாய் நோக்கிப் புறப்படுவதற்காக விமானம் மூலம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்குத் திரும்பியிருந்தார்.

எவ்வாறாயினும் விமான நிலையம் மற்றும் விமானப் பயணிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நாட்டைவிட்டு விமான நிலையம் வழியாக வெளியேறும் முயற்சி தோல்வியடைந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கைது செய்யப்பட்ட பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பதவி விலகுவதற்கு முன்னர், வெளிநாடு செல்ல விரும்புவதாக நம்பப்படுவதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் ஜனாதிபதியின் கடவுச்சீட்டை முத்திரையிடுவதற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் பயணிகள் முனையத்திற்கு செல்ல குடிவரவு அதிகாரிகள் மறுத்துள்ளதுடன், பாதுகாப்பு பிரச்சினை காரணமாக விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தை பயன்படுத்துவதை ஜனாதிபதி தவிர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்லக்கூடிய நான்கு விமானங்களும் சேவையில் ஈடுபடாததால்,  ஜனாதிபதியும் அவரது மனைவியும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விமானப்படை தளத்தில் இரவைக் கழித்ததாக அந்தச்செய்தி சேவை தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரலில் நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்த ஜனாதிபதியின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ஷவும் விமான நிலைய ஊழியர்களுடன் இதேபோன்ற மோதலை அடுத்து இன்ற அதிகாலை டுபாய்க்குச் சென்ற எமிரேட்ஸ் விமானத்தை தவறவிட்டார்.

இலங்கைப் பிரஜாவுரிமைக்கு மேலதிகமாக அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ள பசில் ராஜபக்ஷ, பின்னர் வணிகப் பயணிகளுக்காக விசேட கட்டணச் சேவையைப் பயன்படுத்த முயன்றார். ஆனால் விமான நிலைய மற்றும் குடிவரவு ஊழியர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தச் சேவைகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தனர்.

அத்தோடு, பசில் விமானத்தில் ஏறுவதற்கு பல பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் என  விமான நிலைய அதிகாரி ஒருவர் சர்வதேச செய்திச் சேவையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது ஒரு பதற்றமான சூழ்நிலை என்றும் எனவே அவர் விரைவாக விமான நிலையத்தை விட்டு வெளியேறினார் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி மேலும் கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ புதிய அமெரிக்க கடவுச்சீட்டை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதியையும் அவரது பரிவாரங்களையும் கடற்படை ரோந்துக் கப்பலில் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வது குறித்து ஜனாதிபதியின் நெருங்கிய இராணுவ உதவியாளர்கள் தற்போது கலந்துரையாடி வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related

Tags: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை அதிகரிப்பு

Next Post

ஜூன் மாதத்தில் 27,937 பேர் வெளிநாடு சென்றுள்ளனர் – வேலைவாய்ப்பு பணியகம்

Related Posts

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
மலையகம்

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-01-26
வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

2026-01-26
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.
யாழ்ப்பாணம்

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.

2026-01-26
இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

2026-01-26
அமெரிக்க பனிப்புயல்; 7 பேர் உயிரிழப்பு, 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!
அமொிக்கா

அமெரிக்க பனிப்புயல்; 7 பேர் உயிரிழப்பு, 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!

2026-01-26
Next Post
பிரேசிலிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் – பிரான்ஸ் அரசாங்கம்

ஜூன் மாதத்தில் 27,937 பேர் வெளிநாடு சென்றுள்ளனர் - வேலைவாய்ப்பு பணியகம்

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை - அறிக்கை வெளியீடு!

லங்கா பிரீமியர் லீக்: முதல் லீக் போட்டியில் நடப்பு சம்பியன் ஜப்னா கிங்ஸ்- காலி க்ளேடியேட்டர்ஸ் அணிகள் மோதல்!

லங்கா பிரீமியர் லீக்: முதல் லீக் போட்டியில் நடப்பு சம்பியன் ஜப்னா கிங்ஸ்- காலி க்ளேடியேட்டர்ஸ் அணிகள் மோதல்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

0
மட்டுவில் 8 பேர் கைது

3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

0
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.

0
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

2026-01-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-01-26
வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

2026-01-26
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.

2026-01-26

Recent News

edit post
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

2026-01-26
edit post
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

2026-01-26
edit post
மட்டுவில் 8 பேர் கைது

3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-01-26
edit post
வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.