உரிமை கோரப்படாத சடலங்களை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 3.66 கோடி ரூபாய் வருவாயை கேரள அரசு ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளஅரசானது, அரச வைத்தியசாலைகளில் உள்ள பிணவறைகளில் காணப்படும் உரிமை கோரப்படாத சடலங்களை 2008-ஆம் ஆண்டுமுதல் விற்பனை செய்து வருகின்றது.
அந்த வகையில், இதுவரை 1,122 சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க கேரள அரசு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் 40,000 ரூபாய்க்கும், பதப்படுத்தப்படாத சடலம் 20,000 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருவதாகவும், இதன்மூலம் 3.66 கோடி ரூபாய் வருவாயை இதுவரை ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.