கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை லெவன்ட் தோட்ட மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி பல துயரங்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர்.
குறித்தத் தோட்ட பகுதியில் சுமார் 20 குடும்பங்களை சேர்ந்த 145 பேர் வாழ்ந்து வருகின்றனர். லெவன்ட் தோட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மண்சரிவின் அபாயம் காரணமாக லயன் குடியிருப்புக்களில் இருந்து அகற்றப்பட்டு
பின்னர், மீண்டும் மண்சரிவு அபாயம் உள்ள அதே லயன் குடியிருப்புக்கு இந்த மக்கள் தோட்ட அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் கடந்த 2021ம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவு அபாயத்தால் தோட்ட அதிகாரிகள் லயன் குடியிருப்பில் இருந்து தற்காலிக கூடாரங்களுக்கு அங்குள்ள மக்களை அனுப்பி வைத்தனர்.
பின்னர் NBRO அதிகாரிகள் லெவன்ட் தோட்டப்பகுதிக்கு வருகை தந்து அந்த பிரதேசத்தை ஆய்வு செய்து மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் ஆன்லைன் குடியிருப்பில் வாழ முடியாத நிலை காணப்படுவதாகவும் அறிக்கை வெளியிட்டனர். இவற்றினை கண்டுகொள்தாக தோட்ட நிர்வாகம் மீண்டும் இந்த அபாயம் மிக்க லயன் குடியிருப்புக்கு மக்களை செல்லுமாறு அழுத்தம் பிரயோகித்திருந்தனர்.
200 வருடம் பழமையானதும், மண் சரிவு அபாயம் மிக்க லயன்குடியிருப்புக்கு செல்ல மாட்டோம் என்று மக்கள் தெரிவித்திருந்தபோதும் தோட்ட நிர்வாகம் அழுத்தங்களை பிரயோகித்திருந்தது.
இந்த லயன் குடியிருப்புக்கு செல்ல மறுத்த, மக்களின் தோட்டத் தொழில்களையும் தோட்ட நிர்வாகம் பறித்துள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே அந்தக் காலப்பகுதியில் இருந்து சுமார் மூன்றரை வருட காலமாக எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மக்கள் வாழ்வதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தங்களுடைய தற்காலிக கூடாரங்களும் காற்று மழையின் போது உடைந்து விடும் நிலையிலும் கூடாரங்களுக்குள் மழைநீர் உட்செல்வதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
எனவே மக்கள் தங்களுக்கு வாழ்வதற்கு குடியிருப்புகளையும் பெற்றுத் தருமாறு மக்கள் கவலையுடன் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.