புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் .காஞ்சன விஜேசேகரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.