• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பஹல்காம் தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தானிக்கு எதிரான இந்தியாவின் அதிரடி நடவடிக்கை!

பஹல்காம் தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தானிக்கு எதிரான இந்தியாவின் அதிரடி நடவடிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/24
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் மூலோபாய எதிர் நடவடிக்கைகளை இந்தியா புதன்கிழமை (23) அறிவித்தது.

“எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு” எதிரான ஒரு தீர்க்கமான நிலைப்பாடாக இந்திய வெளிவிவகார அமைச்சு பல நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டியது,

இதில் மூன்று போர்களைச் சந்தித்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மக்களிடையேயான தொடர்புக்கான ஒரு முக்கிய இணைப்பான அட்டாரி-வாகா எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை உடனடியாக மூடுதல் ஆகியவையும் அடங்கும்.

இருதரப்பு உறவுகளுக்கு மேலும் ஒரு அடியாக, சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இந்தியாவில் இருப்பவர்கள் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

Image

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய வெளிவிகார அமைச்சு வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்:

01. சிந்து நதி நீர் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்

சிந்து நதி அமைப்பிலிருந்து ஆண்டுதோறும் 39 பில்லியன் கன மீட்டர் நீர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நதி நீர் பகிர்வை நிர்வகிக்கும் இந்த ஒப்பந்தம், பல வருட மோதல்களுக்கு மத்தியிலும் கூட ஒத்துழைப்பின் அடையாளமாக நீண்ட காலமாகக் கருதப்படுகிறது.

02. அட்டாரி-வாகா எல்லை மூடல்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மக்களிடையேயான தொடர்புக்கு முக்கியமான இடமான அட்டாரி-வாகா எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உடனடியாக மூடப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் ஆவணங்களுடன் எல்லையைக் கடந்தவர்கள் 2025 மே முதலாம் திகதிக்கு முன்பு பாகிஸ்தானுக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

03. சார்க் விசா விலக்கு திட்டத்தை கட்டுப்படுத்துதல்

சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் இரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே நாட்டில் உள்ளவர்கள் வெளியேற 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்படுகிறது.

04. இராணுவ ஆலோசகர்களை வெளியேற்றுதல்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமான ஆலோசகர்களை புது டெல்லி ஆளுமையற்றவர்களாக அறிவித்துள்ளது, அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.

இதேபோன்ற நடவடிக்கையில், இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தில் இருந்து புது டெல்லி தனது சொந்த பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமான அதிகாரிகளையும் திரும்பப் பெறும்.

05. உயர் ஸ்தானிகராலய ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு

புது டெல்லியில் தனது இராஜதந்திர பிரசன்னத்தை 30 ஆகக் குறைக்குமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இது தூதரகத்தின் தற்போதைய செயல்பாட்டுத் திறனை 55 ஆகக் குறைத்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட 2.5 மணி நேர பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்திற்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான துணிச்சலான இராஜதந்திர தாக்குதல் அறிவிக்கப்பட்டது.

Related

Tags: jammu and kashmirNarendra ModiPahalgamPakistanஇந்தியாநரேந்திர மோடிபஹல்காம்பாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்ரீ தலதா வழிபாடு: சிறப்பு ரயில் சேவை இடைநிறுத்தம்!

Next Post

மாணவர்களுக்கு போசாக்கு உணவு திட்டம் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கம்ன தீர்மானம்!

Related Posts

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம்
கிழக்கு மாகாணம்

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம்

2026-01-24
இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மனித வடிவ ரோபோ அறிமுகம்
இந்தியா

இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மனித வடிவ ரோபோ அறிமுகம்

2026-01-24
இந்தியாவில் ரயில்  பயணியரின் பாதுகாப்பு சேவைகளுக்காக மனித வடிவ ரோபோ அறிமுகம்!
இந்தியா

இந்தியாவில் ரயில் பயணியரின் பாதுகாப்பு சேவைகளுக்காக மனித வடிவ ரோபோ அறிமுகம்!

2026-01-24
கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு – கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!
அமொிக்கா

கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு – கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!

2026-01-24
ஒக்டோபர் இறுதிக்குள் 1.6 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை!
இலங்கை

194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

2026-01-24
இன்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பு
இலங்கை

இன்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பு

2026-01-24
Next Post
மாணவர்களுக்கு போசாக்கு உணவு திட்டம் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கம்ன தீர்மானம்!

மாணவர்களுக்கு போசாக்கு உணவு திட்டம் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கம்ன தீர்மானம்!

IPL 2025; ஹைதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய மும்பை!

IPL 2025; ஹைதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய மும்பை!

நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வு-ஜீவன் தொண்டமான்!

நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வு-ஜீவன் தொண்டமான்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

0
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026-01-24

Recent News

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.