பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 17பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் இன்று (12) பிற்பகல் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் 17 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 17 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














