முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் மேலும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றில் இன்று (08) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடத்த 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














