பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள வழங்கப்பட்ட வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் F.U. வுட்லர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க, பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் சமீபத்தில் 071 – 859 88 88 என்ற வட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














