நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இரண்டு விசேட கட்டணமில்லா தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்னிலையில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மகளிர் சபை மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து இந்தச் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் இலக்கங்களைத் தொடர்புகொள்ள முடியும்:
பெண்கள் தொடர்பான தகவல்களுக்கு: 1938 (தேசிய மகளிர் சபையின் பெண்கள் உதவிச் சேவை)
சிறுவர்கள் தொடர்பான தகவல்களுக்கு: 1929 (தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறுவர் உதவிச் சேவை) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.














