நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 3 இந்திய மீனவர் கைது இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்ட நிலையில் அவர்களை ஜனவரி 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றிரவு 9.45 மணியளவில் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து கைதான குறித்த மூவரும் கடற்படையினரால் இலங்கை கரையோர பாதுகாப்பு படையினரிடம் கையளித்திருந்த நிலையில் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினரிடம் பாரப்படுத்தபட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களுடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிக் முற்பகல் 11 மணியளவில் ஊகாவற்றுறை நீதவான் வசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட்டபோது ஜனவரி 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்














