சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 09 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் .
எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படை இவர்களை கைது செய்துள்ளது.
காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறியே 02 நாட்டு படகுடன் 09 மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது .
இரண்டு நாட்டு படகுகளையும் மீனவர்களையும் கைது செய்த கடற்படை விசாரணைகளின் பின்னர் நீரியல்வள துறையினரிடம் மீனவர்களை ஒப்படைக்பட்டனர்.
அவர்களை யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் வாசஸ்தலத்தில் இன்று முற்படுத்தியபோது அனைவரையும் ஜனவரி 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.















