திருகோணமலை மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று காலை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர்கள் பாடசாலை மாணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்த்தை முன்னெடுத்தனர்.
பின்னர் மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலிருந்து பிரதான வீதியூடாகச் சென்று பிரதேச சபை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் இடைவிளகி தூரப் பிரதேச பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

















