தெஹ்ரானில் உள்ள ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்புடைய இலக்குகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
வான்வெளி மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், தெஹ்ரானை நோக்கிய பாதையை ஏற்படுத்தவும் கடந்த ஒரு நாளில் இஸ்ரேலிய விமானப்படை பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
தலைநகரில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குத் துக்கம் அனுசரிப்பதற்காகத் தெஹ்ரானில் பெரும்பாலான மக்கள் திரண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
















