கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று, ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையிலும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, பொலிஸார் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் நீதிமன்றுக்கு முன்பாக போராட்டங்களை முன்னெடுக்க முடியாதெனவும்
நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக இப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபடகூடாது என பொலிஸார் எச்சரித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றினர்.
அதனை தொடர்ந்து போராட்ட காரர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை சிறுவன் சுட்டுக்கொ*ல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















