நியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியுள்ளது என சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.
மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, அங்கு கன மழை பெய்ததுடன் இதனால் வார்க்வோர்த் நகரில் உள்ள மவுராகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகள், வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததுள்ளது
அத்துடன் வடக்குத் தீவின் வக்காட்டேன் பகுதியில் 270 வீடுகளில் இருந்த 2,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதுடன் 5,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும் எயார் நியூசிலாந்து நிறுவனம் 90 விமான சேவைகளை ரத்து செய்துள்ளதுடன் வங்காரே. பார் நார்த் மற்றும் பே ஆப் பிளெண்டி ஆகிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புயல் மற்றும் கனமழைக்கு 5 பேர் உயிரிழந்தனர். மாயமான 11 பேரை தேடி வருகின்றனர்.













