இந்தியா, விருதுநகர் அருகில் நேற்று (19) பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தின்போது குறித்த ஆலையில் 35இற்கும் அதிகமான தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், பிற்பகல் 3.30 மணியளவில் சரவெடி தயாரித்துக்கொண்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிமருந்து உராய்வு காரணமாக தீப்பற்றி பெரும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 21 பெண்கள், 4 ஆண்கள் என தெரிய வந்துள்ளதோடு, இதில் 20 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது.














