இங்கிலாந்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொது சுகாதாரத்திற்கான அரச சங்கம் (RSPH) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 15 ஆயிரம் பேருக்கு ஒரு கழிப்பறை மாத்திரமே உள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது.
கழிப்பறைகள் இல்லாததால் மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் சூழல் உருவாவதாகவும், இது சுகாதாரமற்ற மற்றும் விரும்பத்தகாத சூழலை தோற்றுவிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிதி நெருக்கடி மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாகவே இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசாங்கம் இதற்கென மேலதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.













