கோவையில் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வருவோருக்கு சாக்லேட் கொடுத்து TINA ரோபோ வரவேற்றது.
இந்த நிகழ்வு வாக்காளர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
காலை 7 மணி முதலே வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர்.
தேர்தல் என்றால் ஏதாவது ஸ்பெஷல் நிகழ்வு அனைவரது கவனத்தையும் தட்டி செல்லும்.
அந்த வகையில், கோவை அரசு கலை கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வருவோருக்கு சாக்லேட் கொடுத்து TINA ரோபோ வரவேற்கும் நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த ரோபோ, பட்டு பாவடை அணிந்து கையில் ஒரு தாம்பல தட்டில் ரோஜா பூக்கள், சாக்லெட் வைத்து இருக்கிறது, வாக்குசாவடிக்குள் வாக்காளர்கள் நுழைந்ததும் அன்போடு வரவேற்று சாக்லெட் கொடுக்கிறது.


















