மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
இதேவேளை 345 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிகசாலையாக அமைந்துள்ள புதிய பொது நூலக கட்டிடம் இன்று பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் .
இதேவேளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மட்டக்களப்பு விஜயத்தினை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு: மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம்” எனும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு கட்டமாக, 345 மில்லியன் ரூபா செலவில் இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிகசாலையாக மட்டக்களப்பு புதிய பொது நூலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் புதிய பொது நூலக கட்டிட திறப்பு விழாவில் ; கலந்து கொள்வதற்காக இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு விசேட வரவேற்பளிக்கப்பட்டது
345 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு புதிய பொது நூலகம் பொதுமக்கள் பாவணைக்கு கையளிப்பு
இதனையடுத்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் கட்டத்தின் திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெற்றன.
சுமார் ஒரு லட்சம் புத்தகங்களை கொண்ட இந்த பொது நூலகத்தில் சிறுவர்கள் முதியவர்களுக்கான பிரத்தியோக பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன
சிறுவர்களுக்கான விசேட நவீன பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியவகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது
இன்றைய நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்ன சேர அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு- எம் எல் ஏ எம் கிஸ்புல்லா மற்றும் தமிழரசுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா .சாணக்கியன் ஸ்ரீநேசன் மற்றும் ஸ்ரீநாத் மாவட்ட அரசாங்க அதிபர் .அருள்ராஜ் கிழக்கு மாகாண சபையின் செயலாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள்; பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இதேவேளை மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு கூட்டத்திலும் ஜனாதிபதி இன்று கலந்து கொள்ளவுள்ளார்
அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கிழக்கு மாகாணத்தின் தேசிய நிகழ்வாக போதைப்பொருளுக்கு எதிரான தேசிய செயற்றிட்ட நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது













