வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் காரணமாகவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், வை.எஸ்.ஆர் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் விரைவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஆகவே தொண்டர்கள் அனைவரும் வழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தல்கள் முடிவுகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
வாக்குகள் குறைந்தாலும் அதிகரித்தாலும் ஆபத்து என்பதை அம்மாநில தேர்வு முடிவுகள் தெளிவாக கூறுகிறது. தொண்டர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளமையும் ஜெகன் மோகன் ரெட்டி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தேர்தல் ஆணைய தரவுகளின்படி கொளத்தூரில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















